Sunday, May 20, 2018

விடியல் தேடி.....


நிலவு தூவிய பனித்துளிகளில்

நீராடி மலர்ந்த
பூக்களின் வாசங்களில் புன்னகைக்கிறது
புதிய பூமியொன்று....

நடந்து போன பாதச்சுவடுகளின் ஒற்றையடிப் பாதைகளெங்கும் படுத்துறங்கும் சரித்திரங்களின் நிழலோவியங்கள்....

திசைகளெல்லாம்...
காற்று சுமந்து வரும்
வியர்வைகளின் ஈரத்துளிகள்.....

மரக்கிளைகள் உதிர்த்த
சருகுகளாய்
வைகறை கொண்டாடும்
உயிர்பறவைகளின் சங்கீதம்.....

தூக்கம் கலைந்த
வயல்வெளிகளின்
உல்லாச தலையசைப்பில்
கூந்தல் உலர்த்தும் நெற்கதிர்கள்.....

உறக்க ஓய்வு முடித்து
உழைப்பின் உயிர்மூச்சு சுவாசிக்கலாம்....

மண்வெட்டி மட்டுமல்ல
மயிலிறகும் ஆயுதம்தான்...

விதைப்பது நம்பிக்கையானால்....

செல்வம்

No comments:

Post a Comment