ரணங்களின் மீது
கடந்து போகிறது
ஒவ்வொரு நொடிகளும்.....
எண்ணங்கள் பறந்து செல்லும் திறந்த வெளியின்
எல்லா திசைகளிலும் பாதச்சுவடுகள்.....
காலடியில்
கைநழுவிப் போகிறது கன்னங்களில் வழிந்த
கண்ணீர் துளிகள்....
காத்திருப்புகளில்
பூத்துப்போகிறது கண்மலர்கள்
ஒளி மறைந்து....
கனவுகளில் படர்ந்த இருளில்
உன் நினைவுகள் மட்டும்
தூவி செல்கிறது
வெளிச்சப்பூக்களை.....
மேகதிரள்களில் எட்டிப்பார்க்கும் பிறைநிலா மட்டும்
விதைத்து செல்கிறது
நம்பிக்கை செடியொன்று.....
செல்வம்
No comments:
Post a Comment