பச்சையிலைகளின் பசுமையில் மரங்கள் ஆட்சி செய்யும் மண்தேசம்....
மலர் கிரீடங்களில் தேன் சுரக்கும் பூஞ்சோலை....
முதிர்ந்து உதிர்ந்த சருகுகளும் சலசலக்கும் மண்வீரியம்....
உயிர் சுவாசங்களைப் புதுப்பிக்கும் காற்றாலை...
நிழல்கள் இளைப்பாறும் நிஜங்களின் மஞ்சம்...
மலையரசியின் சிகரம் உரசும் பனித்துளிகளில் ஈரமெடுத்து ஓடிவரும் அருவிமகள் பருவம் தொட்டு நதிப்பெண்ணாகும் பச்சைகுடில்....
மழைமகளின் தாய்வீடு...
பறவைகளின் சரணாலயம்....
தொட்டிலாய் கட்டிலாய் ஊஞ்சலாய் மனித சுகங்களின் தாய்மடியாய்....
இந்த அழகிய கூடாரத்தில் நுழைந்த ஒட்டகமாய் மனிதன்...
செல்வம்
No comments:
Post a Comment