Thursday, May 24, 2018

வருவான் கடவுள்

எல்லா உயரங்களும்
தொட்டுவிடும் தூரமே...
எல்லா உயிர்களும்
நம்பிக்கையின் பிறப்பிடமே...

விடிந்து வரும் சூரியனும் மாலையில் ....
முடிந்து போகிறது ...
நாளை வரலாம் என்ற நம்பிக்கை விதைத்து...

குளிர் நிலவு
வளர்வதும் தேய்வதும் 
ஒரு பௌர்ணமியின் இலக்கை தேடியே...

வண்ண மலர்கள்
மலர்வதும் மணம் வீசுவதும்
பொன்வண்டுகளின்
ஸ்பரிசம்
தேடியே....

கட்டளைகளுக்கு பழகிப்போன பாழும் மனசு மட்டும் இன்னும் காத்திருக்கிறது...

கடவுள் வருவான் கை கொடுப்பானென்று...

செல்வம்

No comments:

Post a Comment