Saturday, May 19, 2018

விவசாயம்

இரவு விசிறிச் சென்ற
நாற்றங்கால் விதைகளாய்
பனித்துளிகள்
புல் வெளியெங்கும்

ஒளி விரல் கீற்றுகளால்
பூமியில் அழுத்திச் செல்லும்
ஒற்றை சூரியன்..

நாற்றுகளைப் பிடுங்கி
நட்சத்திரங்களாய்
விண்வயலில் பயிரிட
மாலை வருவாள்
என் நிலா..

அறுவடைக்காக
காத்திருக்கிறேன்
நான்..

செல்வம்

No comments:

Post a Comment