இரவு விசிறிச் சென்ற
நாற்றங்கால் விதைகளாய்
பனித்துளிகள்
புல் வெளியெங்கும்
ஒளி விரல் கீற்றுகளால்
பூமியில் அழுத்திச் செல்லும்
ஒற்றை சூரியன்..
நாற்றுகளைப் பிடுங்கி
நட்சத்திரங்களாய்
விண்வயலில் பயிரிட
மாலை வருவாள்
என் நிலா..
அறுவடைக்காக
காத்திருக்கிறேன்
நான்..
செல்வம்
No comments:
Post a Comment