இன்னும்
வானம் கருக்கவில்லை...
தூரத்தில் மறையும் சூரியனின் வெப்பக்காற்றை ஆற்றியிருந்தது கடலலைகள்....
முக ரேகைகளில்
களைப்பு கூடுகட்டியிருந்தது...
உழைப்பின் உப்புக்கோடுகளாய்
வியர்வை விட்டுச்சென்ற பிசுபிசுப்பு.....
உடம்புக்கு முன் வீடு திரும்பும் பறவை மனசு....
சின்னக்குளியலில் பட்டென்று விலகும் அசதி....
கொஞ்சம் உணவு
கொஞ்சம் செய்தி....
மீண்டும் காத்திருக்கிறேன்...
நிலா வருவாள்....
செல்வம்
No comments:
Post a Comment