நீ
அள்ளிச் சொருகிய
கூந்தலிலும்
ஆடையிலும் சிக்கித் தவிக்குதடி
என் மனசு
என் கண்களின்
கேள்விகளில் மறைந்திருக்கிறது உன் அழகின் சுவாரஸ்யங்கள்
உன் உஷ்ணம் உணர்ந்து மலர்ந்த தாமரைகள் மலங்க மலங்க விழிக்குதடி....
இன்னொரு முறை எப்படி பூக்கும்....சூரியன் வந்தால்....
முத்து மலையே உனக்கெதற்கடி
முத்து மாலை...
கொஞ்சம் திரும்பு....
காத்திருக்கிறது முத்த மாலை.....
செல்வம்
No comments:
Post a Comment