தூரங்களில் தெரிகிறது முடிவறியா பயணங்களின் இறுதிக்கோடு......
தொட்டுவிட எத்தனிக்கும் நிமிடத்துளிகளில் கானல் நீரின் நிழல் நடனங்கள்....
கடந்து போன மணல் மேடுகளில் நீண்டு வளைந்த பாதச்சுவடுகளின் காலடித்தடங்கள்......
காட்டிக்கொடுக்கும் எட்டப்பனாய் காய்ந்த சருகுகளின் சலனங்கள்.....
தொலைவானத்தில் வானவில்
எங்கோ பெய்த மழையின் முகவரியாய்.....
திசைகளெங்கும் என் பிம்பங்கள் நான் மட்டும் தொலைந்து போனேன் என்னை தேடி......
விதைமுளையின் தளிர்களில் துளிர்க்கிறது புதிய வாழ்க்கையின் ......துவக்கம்
செல்வம்
No comments:
Post a Comment