என்னையும்
மீறி தூரமாகிப்போகிறது
என் நிழல்.....
காலடியில்
கண்ணுக்குத் தெரியும்
நிழல்
கையெட்டா
தூரத்திலிருந்து
கண் சிமிட்டுகிறது....
என்னை
விட்டுப் பிரிந்து
செல்லும் முயற்சிகளில்
தோற்றுப் போகும்
என் நிழல்
மீண்டும் காலடியிலேயே
தஞ்சம் கேட்கிறது.....
என்றாவதொரு நாள்
என் நிழல்
என்னை வென்றிடலாம்
எனக்குத் தெரியாமல்....
கூடவே
இருப்பான்
என்று நானும்
வேறு வழியின்றி
அவனும்
நம்பிக்கையுடனே பயணிக்கிறோம் இலக்கில்லாமல்.....
செல்வம்
No comments:
Post a Comment