வெளிச்சத்தைத் தின்று கொழுத்த இருட்டு....
சின்ன சின்னதாய் மிச்சமாகிப்போன எச்சங்களாய் தூரத்து விண்மீன்கள்.....
இருட்டுக்குப் பழகிப்போன விழிகளில் இருட்டே வெளிச்சமாய்....
நா வறண்ட தண்ணீர் சமுத்திரம்...
விடியல் என்ற நம்பிக்கை வரையும் துடுப்புகள்.....
அலைகள் கொண்டு செல்லும் அவசரச்செய்தி கரைதொட்டும் காற்றின் மொழியறியா மரமனிதர்கள்.....
விதியின் தூண்டிலில் சிக்கியிருக்கிறேன் மீனாய்.....
நரம்பின் கருணைக்குக் காத்திருக்கிறேன்
கரை வரும்.....
செல்வம்
No comments:
Post a Comment